- தாதாத் ஜமாஅத்
- உ.பி.
- தொண்டி
- அதீக் அகமது
- அஷ்ரப்
- உத்திரப்பிரதேசம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தவ்ஹீத்
- உ.பி.
தொண்டி,ஏப்.17: உத்திரபிரதேச மாநிலத்தில் முன்னாள் எம்பி அதீக் அகமதும், அவரது சகோதரர் அஷ்ரபும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுபற்றி தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் பொதுச்செயலாளர் அப்துல் கரீம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘சுட்டுக் கொல்லப்பட்ட இருவரும் காவல் துறையினர் முன்னிலையில் பேசிக் கொண்டிருக்கும் போது துப்பாக்கியால் சுடப்படும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பொது வெளியில் காவல்துறையினர் முன்னிலையிலேயே இத்தகைய வன்முறை வெறியாட்டம் அரங்கேற்றப்படுகிறது என்றால், உபியில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. இத்தகைய காரியங்களை வன்மையாக கண்டிப்பதுடன் நாட்டில் வன்முறை தீயைப்பற்ற வைக்க நினைக்கும் சமூக விரோதிகளையும், அவர்களை ஊக்குவிக்கும் சக்திகளையும் நீதிமன்றங்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என கூறியுள்ளார்.
The post உபியில் மாஜி எம்பி கொலை தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம் appeared first on Dinakaran.